RSS

26/02/2020

2020ம் ஆண்டிக்கானது வந்தாச்சு.....

"இப்ப வருமோ..எப்ப வருமோ" என பாட்டின் வரியை பாடாத குறைதான். இன்று இப்ப வந்தே   விட்டது இவ்வாண்டிற்கான பனிமழை Snow. எங்க நாட்டில், வீட்டில ஸ்னோ கொட்டுகின்றது.
 (மேலே எழுதிய பாடல் வரி இடம்பெற்ற படம்..உழைப்பாளி, பாடல்..ஒரு கோலக்கிளி சோடி தன்னை. சிலவேளை அதிராவுக்கு உதவும்.😃😃😃)

இயற்கை இப்ப வரவர மோசம். அது கூட அந்தந்த நேர்த்தில் செய்யவேண்டியதை ஒழுங்கா செய்யுதில்லை. அல்லது செய்யவிடாமல் மனிதர் செய்துவிடுகிறார்கள். சூழல் மாசடைவதாலோ என்னவோ  இப்ப அதிக வெப்பம் என டிவி சானல்களில் வானிலை ஆராய்ச்சியாளர்கள் சொல்லுகிறார்கள். ஸ்னோ வந்தாலும் பிரச்சனை,  வராவிட்டாலும் பிரச்சனை இங்கு உள்ளவர்களுக்கு.
நான் இங்கு வந்த புதிதில் வரும் ஸ்னோவுக்கும், இப்ப வருவதற்கும் எவ்வளவு வித்தியாசம். முன்பு கார்த்திகை, டிசம்பரில் கொட்ட ஆரம்பித்துவிடும், தை ,மாசி மோசமா இருக்கும்.  வைட் க்றிஸ்மஸ் (White Chiristmas) ஆக இருக்கும். இப்ப அது இல்லை. கனவருடமாச்சு வைட் க்றிஸ்மஸ் வந்து. இப்ப இம்முறை மாசிமாத இறுதியில் இருக்கிறோம். இன்றுதான்தான் கடுமையாக கொட்டுகிறது. அடுத்த மாதம் வசந்தகாலம் ஆரம்பம். சில பூக்கள் இப்பவே பூத்துவிட்டது. என் வீட்டில் டிலிப் மலர்கள் பூமிக்கு வெளியே தலைகாட்டத்தொடங்கீட்டினம். இனி எல்லாமே குளிருக்கு வாடிவிடும்.  இது இப்ப பதிவுக்காக சுடச்சுட பனிமழை (Snow) படங்கள். 



 ஸ்னோவை ஒதுக்கும் போது......








பாருங்கள், ரசியுங்கள்.

24 comments:

  1. ஆஆஆ குளிர்ர்ர்ர் :) இங்கே நேத்து அரை மணிநேரம் கொட்டியிருக்கு நான் வேலையில் இருந்தப்போ ..அப்புறம் ஒரே மழை கல் மழை .எனக்கு ஸ்னோ ஆசையே போயிடுச்சி இப்போல்லாம், :) வேலைக்கு போறதால ஸ்னோவில் விளையாட கஷ்டம் :)உண்மைதான் கிறிஸ்துமஸ் என்றால் சரியா 24 ஆம் தேதி மாலையோ இரவோ வெண் வீதியா இருக்கும் ஜெர்மனியில் .மனிதன் பொல்லாதவன் எல்லாத்தையும் மாற வச்சிட்டான் 

    ReplyDelete
    Replies
    1. வாங்க அஞ்சு. கொட்டிக்கொட்டிருந்தது நல்ல பூ பூவாய்.. பார்க்க ஆசையிருந்தது உடனே படம் எடுத்து பதிவாக்கினேன். ஸ்னோ கொட்டினால் குளிர் அவ்வளவா இருக்காது என்பினம். இம்முறை கொட்டாததற்கு ஒரு ஆராய்ச்சியே நடந்தது. அதில் சொல்லியிருந்தார்கள். மனிதன் எதை விட்டுவைத்தான்...

      Delete
  2. நான் அடுத்த வாரம் தோட்டம் போட யோசிச்சிருக்கேன் :) அதனால் அந்த ஸ்நோவை அப்டியே ஸ்கொட்லாண்டுக்கு அனுப்பி வைங்க :) அப்புறம் ப்ரியா நீங்க ஒரு குண்டு பூனை ஸ்னோவில் செய்யுங்க :)))) 

    ReplyDelete
    Replies
    1. ஆவ்வ்.. நானு நினைத்தேன் அதுதான். இன்னும் கொஞ்சம் கொட்டட்டும், அனுப்பிவிடுவோம். குண்டுபூனைதானே செய்திடலாம். இது கொஞ்சம் பவுடர் ஸ்னோவா இருக்கு. இறுக்கமா இருக்காது. இனி கொட்டுவதில் செய்யலாம்.
      க்விலிங் ல் செய்தாச்சாம்,இதில் செய்வதில் ஈசி.ஹா..ஹா..ஹா

      Delete
    2. //அதனால் அந்த ஸ்நோவை அப்டியே ஸ்கொட்லாண்டுக்கு அனுப்பி வைங்க :) //
      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் நேற்றிலிருந்து ஸ்னோவாகவே இருக்குது, வெள்ளையாகுது ஆனா மழை வந்து கரைக்குது... எனக்கு ஸ்னோ வாணாம்ம்ம்ம்:))..

      என்னாது குண்டுப்பூஸோ? ஏன் ஆரும் இங்கின குண்டா இருக்கினமோ?:))..

      Delete
    3. இங்கு ஒரு ஸ்கொட்டிஸ் குண்டுபூஸ் ஒன்று இருக்கு நாங்க அதைதான் சொன்னோம். உங்களுக்கு தெரியாதில்லை.

      Delete
  3. ஸ்நோவை என்ஜாய் செய்யுங்க ப்ரியா .சுடசுட என்பதைவிட குளிரக்குளிர :) ஹாஹா 

    ReplyDelete
    Replies
    1. என் ஜாய் பன்னுவதை விட அதை ஒதுக்குவதில் கயெல்லாம் விறைத்துவிடும் க்ளவுஸுக்கு மேலால்.. அது பதிவை சுடச்சுட என்றேன்.
      மிக்க நன்றி அஞ்சு வருகைக்கும்,கருத்துக்களுக்கும்.

      Delete
  4. பார்த்தேன், ரசித்தேன். நன்றி.
    ஒதுக்கும் போது உடல் வலிக்குமே!
    பார்க்கும் போது பனிமழை அழகு.

    படங்கள் எல்லாம் மிக தெளிவாக இருக்கிறது.
    பூக்க தொடங்கிய பூக்கள் இனி வாடி விடும்.
    மரத்தூள் போட்டு செடிகளின் வேர்களை பாதுகாக்க வேண்டும் இல்லையா?
    வீட்டுக்குள் சிலதை எடுத்து வைக்க வேண்டும். வேலைகள் நிறைய இருக்கிறது உங்களுக்கு.

    ReplyDelete
    Replies
    1. வாங்க அக்கா. ஒதுக்கும்போது கை வலியை விட கை விறைத்துவிடும்.அது தாங்க முடியாது. க்ளவுஸ் போட்டாலும் எனக்கு இது பிரச்சனை.
      வெளியில் வளரும் சில செடிகள் விண்டருக்கு மடிந்து, சம்மருக்கு தானாக வெளிவந்து பூக்கள் பூப்பவை அக்கா. உதா..டிலிப் மலர்கள். வேறும் இருக்கு இப்படி. இவை நிலத்தில் வளர்பவை. பாதுகாப்பு அவ்வளவு தேவை இல்லை.
      மிக்க நன்றி அக்கா வந்து ரசித்து கருத்திட்டமைக்கு.

      Delete
  5. ஆஆஆஆஅவ்வ்வ்வ்வ் என்ன அழகூஊ எத்தனை அழகூஉ கோடிப்புன்னகை கொட்டிய அழகூஊஊ.... சூப்பராக வந்திருக்குதே ஸ்னோ... ஆனா எங்களுக்கு வேண்டாம்....
    இங்கும் சில இடங்களில் மோசமாக இருக்கு ஆனா எங்களிடத்தில் மழையோடு ஸ்னோவும் வருது... அதனால நிலத்தில் விழுந்ததும் கரைஞ்சிடுது...
    பொதுவா பெப்ரவரி -மார்ச் முன்பகுதியில் தானே வரும்...

    ReplyDelete
    Replies
    1. வாங்க பூஸ். இப்படி வேண்டாம் என பொசுக்கென சொல்லக்கூடாது. நான் டன் கணக்கா ஒதுக்கிற ஸ்னோ எல்லாம் உங்களுக்கே அனுப்ப இருக்கிறேன். உங்க செக் சொல்லீட்டா.
      இங்கு நவம்பரிலே கடும் ஸ்னோ இருந்த காலம் இருக்கு. இப்ப அது குறைஞ்சு பெப்ரவரியில் வந்து நிக்குது. ஏன் ஏப்ரல் கடைசியில் கூட கொட்டியிருக்கு.கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.. இந்த வெதரை நம்பி இப்போதைக்கு அதாவது மார்ச் ல் ஒன்னும் செய்யமுடியாது. அதுவும் குளிர் உறைபனி எனில் கஷ்டம்.

      Delete
  6. புதுச் ஸ்னோ எல்லோ, புதுமணப்பெண்போல் அழகா இருக்குது அத்தனையும்.

    ReplyDelete
    Replies
    1. ஓம் அதிரா கொட்டும்போது பூபூவாய் வர மிகவும் அழகு. எல்லா இடமும் வெள்ளைவெளேர் என இருக்கு அழகுதான்.
      மிக்க நன்றி அதிரா வருகைக்கும், உங்க கருத்துக்களுக்கும்

      Delete
  7. பனிமழை படங்கள் அனைத்துமே அழகு.

    சமீபத்தில் ஷிம்லாவில் பனிமழையில் நனைந்தது நினைவுக்கு வருகிறது.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிகள் வருகைக்கும்,கருத்துபதிவிற்கும்.

      Delete
  8. ///(மேலே எழுதிய பாடல் வரி இடம்பெற்ற படம்..உழைப்பாளி, பாடல்..ஒரு கோலக்கிளி சோடி தன்னை. சிலவேளை அதிராவுக்கு உதவும்.//

    ஆஆஆஆ இப்பாடலை கிளிநொச்சி வசந்தன்[இப்போ காலமாகிவிட்டாரெல்லோ நோயால:(] கோயில் திருவிழாக்களில் அடிக்கடி பாடுவார்ர்ர்... மெய்மறந்து கேட்டிருக்கிறோம்ம்.. அது ஒரு அழகிய பொற்காலம்...

    ReplyDelete
    Replies
    1. ஆ... எனக்கும் தெரியும் இவரை. நானும் என் ப்ரெண்டும் விருப்பமான பாட்டு எழுதி கொடுப்போம்.. குரூப் காரர் எங்க வீட்டு பக்கமாதான் வானை பார்க் செய்து இருப்பினம்.

      Delete
  9. ஆகா...! இதை ரசிக்கவே உங்கள் ஊருக்கு வர வேண்டும்...!

    ReplyDelete
    Replies
    1. வாங்க டிடி அண்ணா. வந்தால் ரசிக்கலாம். மிக்க நன்றி.

      Delete
  10. Replies
    1. வாங்க வல்லிம்மா. வருகைக்கு மிக்க நன்றிகள்.

      Delete
  11. குளிருதே:) பனிமலை படங்கள் சூப்பர்.

    ReplyDelete
    Replies
    1. ஆஹா..குளிருதா. எங்களுக்கு பழகிபோச்சு. மிக்க நன்றி மாதேவி வர்கைக்கும்,கருத்துக்கும்.

      Delete

 
Copyright பிரியசகி