10/11/2015
07/10/2015
பதிவர் திருவிழா.. இது எங்கள் விழா...
ஊரில் கோவில் திருவிழா வருகிறதென்றால், கோவில் சுற்று வட்டாரத்திலும் அதனை அண்டியுள்ள பகுதிகளிலும், மிக உற்சாகமாக அனைவரும் தத்தம் வீடுவாசல்களை துப்பரவாக்குவதில் ஆரம்பித்து வாழை, மாவிலை தோரணங்கள் கட்டி அலங்கரித்து ஊரே களைகட்டும்.
அந்த மாதிரி உணர்வுதான் எனக்கு, இவ்வலைப்பதிவர் சந்திப்பு திருவிழா பற்றிய பதிவுகள் ஆரம்பித்தலிருந்து ஊற்றெடுக்கிறது.
புதுக்கோட்டையில் நான்காவது வலைபதிவர் திருவிழா வருகின்ற 11-10- 15 அன்று வலைப்பதிவர் வரலாற்றிலே முற்றிலும் வேறுபட்டு புத்துணர்வோடு நடைபெற உள்ளது.
இதுவரை அனேகமான வலைப்பக்கங்களில் உற்சாகம், மகிழ்ச்சி பரவசம் என இனம்புரியாத உணர்வுகளை காணக்கூடியதாக இருக்கு. இது "எங்கள் விழா" வாக நடைபெறுவது மட்டற்ற மகிழ்ச்சி.
என்னைப்போன்று வெளிநாட்டில் வாழும் பதிவர்கள் கலந்துகொள்ளமுடியாது போகின்றதே என்ற வருத்தம் இருந்தாலும், மனம் முழுதும் அங்குதான் இருக்கின்றது.
விழா நடைபெற 3நாட்கள் இருக்கின்ற இத்ததருணத்தில் அவ்விழாவினை சிறப்பாக நடாத்தவேண்டும் என இரவுபகல் பாராது உழைக்கும் அத்தனை பேருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
விழா சிறப்பாக நடைபெற என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.
இம்முறை பதிவர்விழாவில் தமிழ்வலைப்பதிவர் கையேடு2015 ஒன்றும் வெளியிட்டு விழாவுக்கு வருபவர்களுக்கு இலவசமாக (விழாவுக்கு வருபவர்களுக்கு மட்டுமே இலவசம்.) கொடுக்க இருக்கிறார்கள்.
இவ்வலைப்பதிவர் விழாவில் பதிவர்களை மேலும் உற்சாகமூட்ட போட்டிகள் இருக்கின்றன. பரிசுகளும் உண்டு. போட்டிகள் முடிவடைந்துவிட்டபோதிலும், அப்போட்டிக்கு வந்த படைப்புகளை வாசித்து, உங்களுக்கு பிடித்தமானதை தர வரிசையில் தேர்வு செய்து அனுப்பி பரிசில்களை வெல்லலாம்.
9.10.2015 நாளே அனுப்பவேண்டிய இறுதிநாளாகும்.
வாசியுங்கள்.!! அனுப்புங்கள்..!! பரிசினைத் தட்டிச் செல்லுங்கள்..!!
அந்த மாதிரி உணர்வுதான் எனக்கு, இவ்வலைப்பதிவர் சந்திப்பு திருவிழா பற்றிய பதிவுகள் ஆரம்பித்தலிருந்து ஊற்றெடுக்கிறது.
புதுக்கோட்டையில் நான்காவது வலைபதிவர் திருவிழா வருகின்ற 11-10- 15 அன்று வலைப்பதிவர் வரலாற்றிலே முற்றிலும் வேறுபட்டு புத்துணர்வோடு நடைபெற உள்ளது.
இதுவரை அனேகமான வலைப்பக்கங்களில் உற்சாகம், மகிழ்ச்சி பரவசம் என இனம்புரியாத உணர்வுகளை காணக்கூடியதாக இருக்கு. இது "எங்கள் விழா" வாக நடைபெறுவது மட்டற்ற மகிழ்ச்சி.
என்னைப்போன்று வெளிநாட்டில் வாழும் பதிவர்கள் கலந்துகொள்ளமுடியாது போகின்றதே என்ற வருத்தம் இருந்தாலும், மனம் முழுதும் அங்குதான் இருக்கின்றது.
விழா நடைபெற 3நாட்கள் இருக்கின்ற இத்ததருணத்தில் அவ்விழாவினை சிறப்பாக நடாத்தவேண்டும் என இரவுபகல் பாராது உழைக்கும் அத்தனை பேருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
விழா சிறப்பாக நடைபெற என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.
இம்முறை பதிவர்விழாவில் தமிழ்வலைப்பதிவர் கையேடு2015 ஒன்றும் வெளியிட்டு விழாவுக்கு வருபவர்களுக்கு இலவசமாக (விழாவுக்கு வருபவர்களுக்கு மட்டுமே இலவசம்.) கொடுக்க இருக்கிறார்கள்.
இவ்வலைப்பதிவர் விழாவில் பதிவர்களை மேலும் உற்சாகமூட்ட போட்டிகள் இருக்கின்றன. பரிசுகளும் உண்டு. போட்டிகள் முடிவடைந்துவிட்டபோதிலும், அப்போட்டிக்கு வந்த படைப்புகளை வாசித்து, உங்களுக்கு பிடித்தமானதை தர வரிசையில் தேர்வு செய்து அனுப்பி பரிசில்களை வெல்லலாம்.
9.10.2015 நாளே அனுப்பவேண்டிய இறுதிநாளாகும்.
வாசியுங்கள்.!! அனுப்புங்கள்..!! பரிசினைத் தட்டிச் செல்லுங்கள்..!!
லேபிள்கள்:
அறிவிப்பு,
மகிழ்ச்சி,
வாழ்த்துக்கள்
02/10/2015
பசுமை நினைவுகள்....
நான் பல தடவை ஊருக்கும், சில நாடுகளுக்கும் பயணப்பட்டிருக்கேன். ஆனா
இம்முறை ஊர்பயணம் (srilanka) மறக்கமுடியாததொன்றாகிவிட்டது. என்ன தான் Airbus A380 செல்ல ஆசைப்பட்டு, அதில் சென்று
வந்தாலும், புகையிரதத்தில் செல்லுமாப்போல வராது. அதில் வரும் சந்தோஷம், மகிழ்ச்சிக்கு ஈடேது.
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு நான் சென்ற புகைவண்டி பிரயாணம் மறக்கமுடியாது. பல நினைவுகள் இந்த இரயில் பயணத்தின்போது ஞாபகத்துக்கு வரத்தொடங்கின. யாழ்ப்பாணத்துக்கு நீண்ட காலமாக புகையிரதம் ஓடவில்லை. பிரச்சனை,சண்டை காரணமா நடைபெற்றுக் கொண்டிருந்த சேவையை 1990 ம் ஆண்டு நிறுத்திவிட்டது.
தற்போதுதான்
மீண்டும் சேவைகள் நடைபெறுது. எனது சின்ன வயது காலத்தில் "யாழ்தேவி" என்ற பெயரில் புகையிரதம் ஒன்று யாழ்-கொழும்புக்கிடையில் ஓடியது. மிகவும் பிரபல்யமானது. சிறுவயதில் ஆசையுடன் கொழும்புக்கு சென்று வந்த புகையிரதம்.
இப்புகையிரதம் (யாழ்தேவி) பல இன்பதுன்ப நிகழ்வுகளோடு யாழ்ப்பாண மக்கள் வாழ்க்கையில் ஒரு அங்கமாகவே இருந்து வந்தது. யாழ்ப்பாணத்துக்கும்-கொழும்புக்கும் இடையே சென்று வந்த இப்புகைவண்டி ஒரு உறவாகிவிட்டிருந்தது. யாழிலிருந்து கொழும்பு சென்று வேலைப்பார்ப்பவர்கள், இதில் வெள்ளிக்கிழமை வீடு திரும்பி, பின் ஞாயிற்றுக்கிழமை கொழும்பு செல்வார்கள். அத்தனை தூரம் பயணப்பட வசதியாக இவ்வண்டி இருந்தது. நிறைய அண்ணா,அக்காமாரின் இதயத்தை இடம் மாற்றி, இன்ப நிகழ்வுகளுக்கு வழிவகுத்தது இவ்யாழ்தேவி.
என்னதான் இச்சேவை நடைபெற்றாலும் அக்காலம்போல வரவே வராது. அந்நினைவை நினைக்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆனா திரும்ப வராதே...ம்.ம்ம்
ஆனால் எனக்கு யாழ்தேவியில் செல்லக் கொடுத்து வைக்கவில்லை. நான் intercity எக்ஸ்பிரஸ் ல்தான் ஊருக்குச்சென்றேன். ப்ளைட் ல் என்னதான் வசதிகள் இருந்தாலும், அதில் ஒன்று தூக்கம், அல்லது அதில் இருக்கும் கேம்ஸ், அல்லது படங்கள் பார்க்க, பாட்டுக்கள் கேட்கவே முடியும். வெளியில் பார்த்து ரசிக்க வெண்மேகங்கள்தான். அதையும் எவ்வளவுதான் ரசிக்கமுடியும்.
நான் சென்ற அதிவிரைவுவேக புகைவண்டி.
ஆனால் புகைவண்டியில் அப்படியில்லை.
அதுவும் ஜன்னலோர இருக்கை கிடைத்துவிட்டால் சொல்லவே தேவையில்லை. பகல் நேர
பயணமானால் ஜன்னல் பக்கம் இருந்து பார்க்கும்போது எங்களை கடந்து
செல்லும் இயற்கையழகு, மனிதர்கள், மிருகங்கள், வீதிகள், வாகனங்கள் இப்படி
ரசிக்க நிறைய்ய்ய்ய இருக்கும். நேரம் செல்வதே தெரியாது. அப்படிப்பட்ட பயணமாக நீண்ண்ண்டகாலத்துக்கு பின் கிடைத்தது. மிகவும் சந்தோஷமாக இருந்தது அப்பயணம்.
கிளிநொச்சி(மாவட்டம்) எனும் ஊர்.
ஆனையிறவு உப்பளம்
சாவகச்சேரி எனும் ஊரில் இருக்கும் வைத்தியசாலை
முதன் முதல் யாழ்தேவி புகைவண்டி பயணத்தின் போது என் தம்பியுடன் ஜன்னலோர இருக்கைக்கு சண்டை பிடித்ததும், எங்கள் சண்டையை பயன்படுத்தி மாமா மகன் அவ் இருக்கையில் ஓடிபோய் இருந்து கொண்டதும், பின்னர் நானும் தம்பியும் சண்டையை மறந்து அவனை அதிலிருந்து ஒற்றுமையா அப்புறப்படுத்தி, "நீ இரு, இல்லையில்லை நீ இரு" என்று விட்டுக்கொடுத்து, பின்னர் இருவரும் மாறிமாறி இருந்து போனதும் ஞாபகத்தில் வந்து மனதை நெகிழச்செய்தது. இப்படி என் பயணம் நீண்ட காலத்தின் பின், யாழ்தேவியில் செல்லாவிட்டாலும், பல பழைய நினைவுகளை ஏற்படுத்திய ரயில் பயணமாக, மறக்கமுடியாமலும் அமைந்துவிட்டது...!!!!
இதுதான் எங்க ஊர் யாழ்ப்பாணம் புகையிரத நிலையம்.
பின்குறிப்பு.>ஆனாலும் இடையில் ஒருநாள் சுன்னாகம் எனும் ஊரிலிருந்து யாழ்தேவியில் ஏறி(டிக்கெட் எடுத்துதான்) யாழ்ப்பாணத்துக்கு சென்று வந்தேன். விருப்பத்தை கொஞ்ச தூரமெனினும் யாழ்தேவியில் பயணம் செய்து நிறைவேத்தியாச்சு...!!
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு நான் சென்ற புகைவண்டி பிரயாணம் மறக்கமுடியாது. பல நினைவுகள் இந்த இரயில் பயணத்தின்போது ஞாபகத்துக்கு வரத்தொடங்கின. யாழ்ப்பாணத்துக்கு நீண்ட காலமாக புகையிரதம் ஓடவில்லை. பிரச்சனை,சண்டை காரணமா நடைபெற்றுக் கொண்டிருந்த சேவையை 1990 ம் ஆண்டு நிறுத்திவிட்டது.
இப்புகையிரதம் (யாழ்தேவி) பல இன்பதுன்ப நிகழ்வுகளோடு யாழ்ப்பாண மக்கள் வாழ்க்கையில் ஒரு அங்கமாகவே இருந்து வந்தது. யாழ்ப்பாணத்துக்கும்-கொழும்புக்கும் இடையே சென்று வந்த இப்புகைவண்டி ஒரு உறவாகிவிட்டிருந்தது. யாழிலிருந்து கொழும்பு சென்று வேலைப்பார்ப்பவர்கள், இதில் வெள்ளிக்கிழமை வீடு திரும்பி, பின் ஞாயிற்றுக்கிழமை கொழும்பு செல்வார்கள். அத்தனை தூரம் பயணப்பட வசதியாக இவ்வண்டி இருந்தது. நிறைய அண்ணா,அக்காமாரின் இதயத்தை இடம் மாற்றி, இன்ப நிகழ்வுகளுக்கு வழிவகுத்தது இவ்யாழ்தேவி.
என்னதான் இச்சேவை நடைபெற்றாலும் அக்காலம்போல வரவே வராது. அந்நினைவை நினைக்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆனா திரும்ப வராதே...ம்.ம்ம்
ஆனால் எனக்கு யாழ்தேவியில் செல்லக் கொடுத்து வைக்கவில்லை. நான் intercity எக்ஸ்பிரஸ் ல்தான் ஊருக்குச்சென்றேன். ப்ளைட் ல் என்னதான் வசதிகள் இருந்தாலும், அதில் ஒன்று தூக்கம், அல்லது அதில் இருக்கும் கேம்ஸ், அல்லது படங்கள் பார்க்க, பாட்டுக்கள் கேட்கவே முடியும். வெளியில் பார்த்து ரசிக்க வெண்மேகங்கள்தான். அதையும் எவ்வளவுதான் ரசிக்கமுடியும்.
நான் சென்ற அதிவிரைவுவேக புகைவண்டி.
கிளிநொச்சி(மாவட்டம்) எனும் ஊர்.
ஆனையிறவு உப்பளம்
சாவகச்சேரி எனும் ஊரில் இருக்கும் வைத்தியசாலை
முதன் முதல் யாழ்தேவி புகைவண்டி பயணத்தின் போது என் தம்பியுடன் ஜன்னலோர இருக்கைக்கு சண்டை பிடித்ததும், எங்கள் சண்டையை பயன்படுத்தி மாமா மகன் அவ் இருக்கையில் ஓடிபோய் இருந்து கொண்டதும், பின்னர் நானும் தம்பியும் சண்டையை மறந்து அவனை அதிலிருந்து ஒற்றுமையா அப்புறப்படுத்தி, "நீ இரு, இல்லையில்லை நீ இரு" என்று விட்டுக்கொடுத்து, பின்னர் இருவரும் மாறிமாறி இருந்து போனதும் ஞாபகத்தில் வந்து மனதை நெகிழச்செய்தது. இப்படி என் பயணம் நீண்ட காலத்தின் பின், யாழ்தேவியில் செல்லாவிட்டாலும், பல பழைய நினைவுகளை ஏற்படுத்திய ரயில் பயணமாக, மறக்கமுடியாமலும் அமைந்துவிட்டது...!!!!
இதுதான் எங்க ஊர் யாழ்ப்பாணம் புகையிரத நிலையம்.
பின்குறிப்பு.>ஆனாலும் இடையில் ஒருநாள் சுன்னாகம் எனும் ஊரிலிருந்து யாழ்தேவியில் ஏறி(டிக்கெட் எடுத்துதான்) யாழ்ப்பாணத்துக்கு சென்று வந்தேன். விருப்பத்தை கொஞ்ச தூரமெனினும் யாழ்தேவியில் பயணம் செய்து நிறைவேத்தியாச்சு...!!
03/09/2015
மிதக்கும் சந்தையில்......
தாய்லாந்தில் இந்த மிதக்கும் சந்தை சற்று வித்தியாசமானது. இந்த மிதக்கும் சந்தை (Floating Market). Damnoen Saduak என்ற வாய்க்காலுக்கு இருமருங்கிலும் பெட்டிக்கடைகள் இருக்க, நடுவில் ஓடும் நீரோடையில் இந்த மிதக்கும் சந்தையில் வியாபாரம் பரபரப்பாக நடக்கின்றது. கால்வாய்க்கு இருமருங்கிலும் அமைந்த பெட்டிக் கடைகள், கூடவே கால்வாயில் பயணிக்கும் நீண்ட வள்ளங்களில் ஒவ்வொரு வியாபாரியும் தங்கள் பொருட்களை எடுத்துக் கொண்டு அப்பாதையின் ஒரு முனையில் இருந்து இன்னொரு முனை வரை பயணம் செய்வார். இந்த இடத்துக்குப் பொருட்களை வாங்க வரும் சுற்றுலாப் பயணிகள், அங்கே நிற்கும் வள்ளங்களில் கட்டணம் கொடுத்து ஏறிப் பயணித்துக் கொண்டே எதிர்ப்படும் இந்த மிதக்கும் கடைகளில் பேரம் பேசிப் பொருட்களை வாங்குவார்கள். பழ வள்ளம், கைவினைப் பொருட்களை விற்பனை செய்யும் வள்ளம், தாய்லாந்தில் தொப்பிகள் பிரபல்யமாக இருக்கு. கூடைத் தொப்பிகளை விற்கும் தொப்பிக்கடை வள்ளம், சைவ, அசைவ சாப்பாட்டுக்கடை வள்ளம் என விதவிதமான வள்ளங்கள்.
பேரம் பேசும் சுற்றுலா பயணி.
ஐஸ்கிரீம் விற்கும் வள்ளம்...
வாங்கிய ஐஸ்கிரீம்
எதிர்ப்படும் ஒவ்வொரு வள்ளக் கடைகளும் விதவிதமான பொருட்களோடு.........
பழ(ங்கள்) வள்ளம்
இனிப்புப் பதார்த்தங்களை யார்தான் விரும்பமாட்டார்கள்.இதில் தாய்லாந்து மக்களும் விதிவிலக்கல்ல. தாய்லாந்தில் பிரபலமான வாழைப்பழ பான் கேக்.
இது இன்னொரு பிரபல்யமான உணவு மாம்பழச்சாதம். Mango Rice with Coconut milk
படகில் போகும்போது ஓரிடத்தில் நின்ற மாமரம் காய்களுடன்..
தொடரும்........
லேபிள்கள்:
ஊர் உலா,
தகவல்கள்,
தாய்லாந்து
Subscribe to:
Posts (Atom)