இந்த கொரோனாவால் எல்லாரும் வீட்டில்தான். கணவருக்கு 4 கிழமைக்கு பின் இவ்வாரமே வேலைக்கு போகிறார்..ஆனால் இங்கு லொக்டவுன் என வீட்டிலே அடைந்து இருப்பது இல்லை. எங்கள் தேவைக்கு கடைக்கு போய்வருகிறோம். கடைகளில் இடைவெளியை கட்டாயம் கடைபிடிக்கவேண்டும்.
இந்த வாரம் (27ந்திகதியிலிருந்து) முதல் இங்கு கட்டாயம் மாஸ்க் (Masks) போட்டுதான் கடைகளுக்கு செல்லமுடியும்.
இந்த லொக்டவுன் காலத்தில் நான் செய்த சில உணவுகள் இப்பதிவில். எனக்கு வீட்டில் இருவராலும் சாப்பாட்டு பிரச்சனையில்லை. எதையும் சமாளிப்பார்கள். நான்தான் எதையாவது முயற்சி செய்து , இருவரையும் பரிசோதனை எலிகளாக்கி விடுவேன். ஹா...ஹா..ஹா...
மாங்காய் கிடைத்து ஊறுகாய் போட்டேன். நெல்லிக்காயிலும் போட்டாச்சு. பூரி மாதம் 2 தரம்தான் செய்வது. அது நல்லாவே வரும். கேக் புது முயற்சி. அதுவும் சொதப்பாமல் வந்தது.
அதைவிட எங்கள் அன்பு நண்பி, தானைத்தலைவியின் செயலாளர், ஏஞ்சல்கிச்சன் ஓனர் அஞ்சுவின் குணுக்கு செய்தேன். சூப்பரா, நல்ல டேஸ்டா இருந்தது. இப்பதிவு எழுதும்வரை 2 தரம் செய்தாச்சு. தாங்க்ஸ் அஞ்சு.
பனங்கிழங்கும் கிடைத்தது, அவித்து சாப்பிட்டாயிற்று. ஆனா கிழங்கு ஊரில் சாப்பிடுமாப்போல இல்லை. ஊரில் பனங்கிழங்கு அவித்து அதை அப்பா நாரெல்லாம் எடுத்து அழகா வட்ட வட்டமா வெட்டி வைப்பார். அதோடு உப்பு, மிளகு, உள்ளி, தேங்காய்துண்டு சேர்த்து சாப்பிட என்னா ருசி. இப்பவும் நினைத்தால் வாய் ஊறும். சிலவேளை இவை எல்லாம் சேர்த்து உரலில் போட்டு துவைத்தும் சாப்பிடுவோம். மறக்கமுடியா நினைவுகள்.
எங்கள் வீட்டில் இரண்டு நெல்லிமரமும் இருக்கு. இந்த பெரிய நெல்லிக்காய் அளவிலும் பெரிது. மரத்தில் காகம் இருந்து ஒவ்வொன்றா கொத்தி போடும். இப்பவும் இருக்கு மரம். நிறைய காய்க்கும். இதையும் உப்புமிளகாய்தூள் கலந்து தொட்டு சாப்பிடுவோம். ஆனா என்ன கொஞ்ச நேரத்துக்கு வேறு ஒன்றும் சாப்பிட இயலாது. அதன் டேஸ்ட் தெரியாது. இதுதான் டொமினேட் செய்யும்.
இங்கு கிடைத்த இந்த நெல்லிக்காயை ஊறுகாய் போட்டுவிட்டேன்.
இது என்ன தெரியுமா? பப்பாக்காய். (பப்பாளிபழத்தின் காய்). ஊரிலிருந்த வரை உண்மையில் நான் இப்படி சாப்பிடவில்லை. ஆனா அக்கா சொன்னா அம்மா சமைக்கிறவா என. ஆனா எனக்கு ஞாபகமில்லை. இங்கு முதன்முதல் எனக்கு கணவர்தான் இதை சாலட் செய்யசொல்லி சொன்னார். பப்பாகாயை ஸ்க்ரப் செய்து சி.வெங்காயம், ப.மிளகாய், கறிவேப்பிலை கொத்தமல்லி, (இவைகளை பொடியாக வெட்டி )உப்பு, கொஞ்சம் லெமன் ஜுஸ் விட்டு நான் மரஉரலில் துவைத்து எடுத்தேன். சூப்பரா இருந்தது. கசக்கும் என யாராவது நினைக்கவேண்டாம். மிக அருமையான சாலட், துவையல் எப்படிவேணா வைச்சுகொள்ளுங்கோ பேரை...
இது பின்பு கிடைத்த பப்பாக்காயில் பொரியல் செய்தேன். இப்போ இதில் குழம்பு, கறி, பொரியல் என செய்வது வழக்கமாகிவிட்டது.
இது மிளகுசாதம் செய்தேன். இது தெரிந்திருக்கும் எல்லாருக்கும். வழமையா வதக்கும் (வெங்காயம்,ப.மிளகாய், இஞ்சி,உள்ளி) பொருட்களுடன் (க.பருப்பு, உ.பருப்பு போடாமல்) கறுவா, ஏலம், கராம்பு போட்டு வதக்கி, பின் கஜுவும்போட்டு வதக்கியபின் சாதத்தினை(இதற்கு சாதம் குழைய வேககூடாது.) போட்டு எல்லாவற்றுடன் நன்றாக கலந்து, கடைசியாக அரைத்த மிளகுதூள், கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து, கொஞ்ச நெய் விட்டு கலந்தபின் இறக்கி சுடச்சுட சாப்பிட ஆஹா என்ன ருசி......
இதில் போண்டா, பூரி, பன்(Bun), அரிசி ஊறவைத்து அரைத்து குறுணல் எடுத்து கஞ்சி காய்ச்சி செய்த அப்பம், கேக், பரோட்டா இது செய்ய முன் சுற்றி வைத்த போதுதான் எடுத்தேன். வடை,
இது இலங்கையில் பிரபல்யமான ரோஸ்ட் பாண்(Bread) & Sampol. இது மட்டும் என் கணவர் செய்தார்.
கணவர் எங்கள் பிஞ்சு ஞானி மாதிரி. என்ன கிடைக்குதோ போட்டு செய்து அதற்கு ஓர் பேரும் வைத்துவிடுவார். அளவு கேட்டால்.. ம்க்கும் சொல்லீட்டாலும். எல்லாமே கண் பார்க்க கை செய்யோனும் என சொல்லும் ரகம். ஜேர்மன் உணவு வகைகள் பீஸா, பன், ரொட்டி, நூடுல்ஸ் எல்லாம் செய்வார். டேஸ்ட் ஆக இருக்கும். ப்ளான் செய்து செய்வார். ஆனா அது அவரின் ஓன் ரெசிப்பியாகதான் இருக்கும். எதையும் பார்த்து செய்வதில்லை.. அப்படி பார்த்தாலும் அதை மாதிரி கடைசி வரை செய்யவே மாட்டார்.கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர். நான் முதல் தரம் பார்த்து செய்து சரிவந்தால், அடுத்த முறை கொஞ்சம் மாத்தி விடுவேன். வேற ஐடியா கிடைத்துவிடும்.
வழமையாக இந்த பன் அவர்தான் செய்வார். அளவு என்ன என கேட்க சொல்லத்தெரியலை என்றார். பின் இது youtube பார்த்து செய்தேன். நல்லாயிருக்கு என இருவருமே சொன்னார்கள்.
இங்கு மாங்காய் கிடைக்கும். அடிக்கடி வாங்கி ஊறுகாய் போடுவேன். ஆனா எனக்கு சும்மா உப்புமிளகாய்தூளோடு தொட்டு சாப்பிடுவதே மிகவும் விருப்பம். பள்ளிகூடம் போகும் நாட்களில் அங்கு உப்புமிளகாய்தூள் கொண்டுபோய் intervel time ல நண்பிகளோடு பக்கத்து வீட்டுக்கு தண்ணீர் குடிக்கவென போய் (அதுவும் பாடசாலைவேலிக்குள்ளார புகுந்து போவது. முன்வாசலால் போகமுடியாது) மாங்காய் பறித்து இதில் தொட்டு சாப்பிட என்னா ருசி. மறக்கமுடியாது அந்நாட்களை.
என் வீட்டுத்தோட்டத்தில்.......
இம்மாதம் 6ந்திகதியில் இப்படி இருந்தன ரோஜா செடிகள். அப்போதான் துளிர் எல்லாம் வரத்தொடங்கியிருந்த வேளை......இன்று இப்படி. இப்போ இங்கு மழையும், குளிருமாக இருக்கின்றது.
வீடியோ கண்டிப்பாக பாருங்கோ. சிறுமுயற்சி.
இதுதான் எங்கள் வீட்டின் Pear பூக்கள். ( பாருங்கோ பிஞ்சு ஞானி ) இம்முறையும் மரங்கொள்ளா அளவுக்கு பூத்திருக்கினம். அவசர அவசரமா பூப்பது இவாதான். எத்தனை காய்கள் தருகினமோ தெரியாது. இப்படித்தான் நிறைய்ய பூக்கள் பூப்பது. பின் 1 அல்லது 2,3 காய்களோடு நிறுத்திவிடுவினம். கர்ர்ர்ர்ர்ர்ர்ர் இம்முறை எப்படியிருக்குமோ தெரியாது.