ஊரில் கோவில் திருவிழா வருகிறதென்றால், கோவில் சுற்று வட்டாரத்திலும் அதனை அண்டியுள்ள பகுதிகளிலும், மிக உற்சாகமாக அனைவரும் தத்தம் வீடுவாசல்களை துப்பரவாக்குவதில் ஆரம்பித்து வாழை, மாவிலை தோரணங்கள் கட்டி அலங்கரித்து ஊரே களைகட்டும்.
அந்த மாதிரி உணர்வுதான் எனக்கு, இவ்வலைப்பதிவர் சந்திப்பு திருவிழா பற்றிய பதிவுகள் ஆரம்பித்தலிருந்து ஊற்றெடுக்கிறது.
புதுக்கோட்டையில் நான்காவது வலைபதிவர் திருவிழா வருகின்ற 11-10- 15 அன்று வலைப்பதிவர் வரலாற்றிலே முற்றிலும் வேறுபட்டு புத்துணர்வோடு நடைபெற உள்ளது.
இதுவரை அனேகமான வலைப்பக்கங்களில் உற்சாகம், மகிழ்ச்சி பரவசம் என இனம்புரியாத உணர்வுகளை காணக்கூடியதாக இருக்கு. இது "எங்கள் விழா" வாக நடைபெறுவது மட்டற்ற மகிழ்ச்சி.
என்னைப்போன்று வெளிநாட்டில் வாழும் பதிவர்கள் கலந்துகொள்ளமுடியாது போகின்றதே என்ற வருத்தம் இருந்தாலும், மனம் முழுதும் அங்குதான் இருக்கின்றது.
விழா நடைபெற 3நாட்கள் இருக்கின்ற இத்ததருணத்தில் அவ்விழாவினை சிறப்பாக நடாத்தவேண்டும் என இரவுபகல் பாராது உழைக்கும் அத்தனை பேருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
விழா சிறப்பாக நடைபெற என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.
இம்முறை பதிவர்விழாவில் தமிழ்வலைப்பதிவர் கையேடு2015 ஒன்றும் வெளியிட்டு விழாவுக்கு வருபவர்களுக்கு இலவசமாக (விழாவுக்கு வருபவர்களுக்கு மட்டுமே இலவசம்.) கொடுக்க இருக்கிறார்கள்.
இவ்வலைப்பதிவர் விழாவில் பதிவர்களை மேலும் உற்சாகமூட்ட போட்டிகள் இருக்கின்றன. பரிசுகளும் உண்டு. போட்டிகள் முடிவடைந்துவிட்டபோதிலும், அப்போட்டிக்கு வந்த படைப்புகளை வாசித்து, உங்களுக்கு பிடித்தமானதை தர வரிசையில் தேர்வு செய்து அனுப்பி பரிசில்களை வெல்லலாம்.
9.10.2015 நாளே அனுப்பவேண்டிய இறுதிநாளாகும்.
வாசியுங்கள்.!! அனுப்புங்கள்..!! பரிசினைத் தட்டிச் செல்லுங்கள்..!!
அந்த மாதிரி உணர்வுதான் எனக்கு, இவ்வலைப்பதிவர் சந்திப்பு திருவிழா பற்றிய பதிவுகள் ஆரம்பித்தலிருந்து ஊற்றெடுக்கிறது.
புதுக்கோட்டையில் நான்காவது வலைபதிவர் திருவிழா வருகின்ற 11-10- 15 அன்று வலைப்பதிவர் வரலாற்றிலே முற்றிலும் வேறுபட்டு புத்துணர்வோடு நடைபெற உள்ளது.
இதுவரை அனேகமான வலைப்பக்கங்களில் உற்சாகம், மகிழ்ச்சி பரவசம் என இனம்புரியாத உணர்வுகளை காணக்கூடியதாக இருக்கு. இது "எங்கள் விழா" வாக நடைபெறுவது மட்டற்ற மகிழ்ச்சி.
என்னைப்போன்று வெளிநாட்டில் வாழும் பதிவர்கள் கலந்துகொள்ளமுடியாது போகின்றதே என்ற வருத்தம் இருந்தாலும், மனம் முழுதும் அங்குதான் இருக்கின்றது.
விழா நடைபெற 3நாட்கள் இருக்கின்ற இத்ததருணத்தில் அவ்விழாவினை சிறப்பாக நடாத்தவேண்டும் என இரவுபகல் பாராது உழைக்கும் அத்தனை பேருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
விழா சிறப்பாக நடைபெற என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.
இம்முறை பதிவர்விழாவில் தமிழ்வலைப்பதிவர் கையேடு2015 ஒன்றும் வெளியிட்டு விழாவுக்கு வருபவர்களுக்கு இலவசமாக (விழாவுக்கு வருபவர்களுக்கு மட்டுமே இலவசம்.) கொடுக்க இருக்கிறார்கள்.
இவ்வலைப்பதிவர் விழாவில் பதிவர்களை மேலும் உற்சாகமூட்ட போட்டிகள் இருக்கின்றன. பரிசுகளும் உண்டு. போட்டிகள் முடிவடைந்துவிட்டபோதிலும், அப்போட்டிக்கு வந்த படைப்புகளை வாசித்து, உங்களுக்கு பிடித்தமானதை தர வரிசையில் தேர்வு செய்து அனுப்பி பரிசில்களை வெல்லலாம்.
9.10.2015 நாளே அனுப்பவேண்டிய இறுதிநாளாகும்.
வாசியுங்கள்.!! அனுப்புங்கள்..!! பரிசினைத் தட்டிச் செல்லுங்கள்..!!