மிக நீண்ட காலமாக போகமுடியாமல், கடுமையான இராணுவ கட்டுப்பாட்டுடன் இருந்த ஊர். இங்கு இருந்த சீமெந்து பாக்டரியை பார்க்க பாடசாலையிலிருந்து சின்ன வகுப்பில் அழைத்துச்சென்றார்கள். அப்படி சென்றதுதான். அதன்பின் போகமுடியாதபடி சூழ்நிலை அமைந்துவிட்டது.
கடந்த வருடம் ஊருக்கு சென்றபொழுது, நீண்ட காலத்துக்குபின் கே.கே.எஸ் க்கு போக சந்தர்ப்பம் கிடைத்தது. அங்கு இப்போ நிறைய சுற்றுலா பயணிகள் வருகிறார்கள்.
இங்கு இருந்த சீமெந்து பாக்டரி இலங்கையில் மிகப்பெரிய பாக்டரி. அது இப்போ இருக்கும் நிலையை பார்த்தால் கண்களில் கண்ணீர் தழும்புகிறது. எத்தனைபேருக்கு வாழ்வளித்த தொழிற்சாலை. இப்போ அது வாழ்விழந்து நிற்கின்றது.
என்னதான் அங்கு செல்ல கிடைத்தாலும், எனக்குள் ஏதோ இனம்புரியாத வேதனை ஏற்பட்டது உண்மை. சந்தோஷம், மகிழ்ச்சி இல்லை. அது திரும்ப கிடைக்கப்போவதுமில்லை.
******************************************************