RSS

30/01/2015

எங்கெங்கு காணினும்.....

நவம்பர், டிசம்பர் மாதங்களில் பனி பொழிய ஆரம்பித்துவிடும். இம்முறை கடந்தவருடம் பனி கொட்டவேண்டிய நேரம் இங்கு நல்ல வெயில். மிக தாமதமாக இப்போ ஜனவரி மாத இறுதியில் பொழிய ஆரம்பித்திருக்கின்றது. நேற்றும், இன்றும் கூடுதலாக இருக்கின்றது. இது தொடரும் என தெரிகிறது.
எங்கெங்கு காணினும் ஒரே வெண்மையாகவே இருக்கு. அழகாகதான் காட்சியளிக்கின்றன. அந்த அழகை  நீங்களும் பார்த்து ரசிக்க......










இது ஸ்னோ அள்ளிக்கொட்டுவதற்கு பயன்படுவது. மற்றது வாளியினுள் ஸ்பெஷல் உப்பு.(Salz - salt) வாசலில் கொட்டியிருக்கும் ஸ்னோவை(1வது படம்) அள்ளிக்கொட்டின பின் நிலத்தில் ஆங்காங்கு சிலவேளைகளில் வழுக்கும் தன்மையாக இருக்கும். அத் தருணத்தில் இந்த உப்பை தூவிவிட்டால் கரைந்துவிடும். வீட்டுக்கு (தபாற்காரர், பேப்பர் கொண்டு) வருபவர் வழுக்கி விழுந்துவிட்டால் நாம்தான் அவர்களுக்கான பணம் (மருத்துவச்செலவுக்கான)கட்டவேணும்.
இவர் அள்ளிகொட்டுகிறார்.
ஸ்ஸ்..ஸ்ஸ்ப்பா நானும் அள்ளனுமே!! 'ஸ்னோவை'தான்.
******************

38 comments:

  1. Replies
    1. வாங்க, ஆறுதலா வாங்க. இல்லேன்னா வழுக்கும்!!!!

      Delete
  2. வெள்ளையா.... ஸ் .... குளிர்ச்சியா இருக்கு ...அழகு

    ReplyDelete
    Replies
    1. அழகா இருக்கும் அனுராதா.எல்லா இடமும் வெள்ளை வெளேர் என. மைனஸ் என்றால் கொட்டிய பனி அப்படியே இருக்கும். கரையாது.
      -நன்றி-

      Delete
  3. ஆஹா...வெள்ளை வெளேர்ன்னு...பார்க்க அழகா இருக்கு...ஆனா குளிரை நினைத்தால் பயமாக இருக்கு....

    ஸ்ஸ்..ஸ்ஸ்ப்பா நானும் அள்ளனுமே!! 'ஸ்னோவை'தான்.//

    அடடா....

    ReplyDelete
    Replies
    1. ம்..பார்க்க அழகுதான் உமையாள். குளிர் எங்களுக்கு பழகிவிட்டது. கனடாவில் இதைவிட மோசம்.
      ஸ்னோ அள்ளுவது இப்போ பரவாயில்லை. முன்னாடி கூரையிலிருந்து கொட்டும் பாருங்க. அது அள்ளுவது தான் கஷ்டம்.
      -நன்றி உமையாள்-

      Delete
  4. அழகா தான் இருக்கு:) but நீங்க அள்ளனுமே:((

    ReplyDelete
  5. நல்ல அழகாக இருக்கிறது நம்மூரு அரசியல்வாதிகள் போல வெள்ளை மனமாக....

    ReplyDelete
    Replies
    1. அவ்வளவு நல்லவங்களா அவங்க.ஆவ்வ். உங்க ஊர் அரசியல்வாதிங்க பற்றி தெரியாது அதுதான் கேட்டேன்.
      நன்றி சகோதரர்-

      Delete
  6. இங்கே கல் மழை ஸ்னோ ரெண்டும் ..கொட்டி கரைந்ஜாச்சு ..இப்ப மீண்டும் ஆரம்பிக்குது

    ReplyDelete
    Replies
    1. எங்களுக்கு நல்ல பூ மாதிரி கொட்டிச்சு அஞ்சு. இனி வரும் வாரமும் தொடரும் போல. இப்பதிவு போட்டபின் நிறைய கொட்டிவிட்டது. சின்னப்பிள்ளைகள் எல்லாத்துக்கும் கொண்டாட்டம். ஸ்னோ விளையாட்டுக்கு. ஸ்கூல் வேறு கார்னிவலுக்காக லீவு.
      -நன்றி அஞ்சு.-

      Delete
  7. ஆஹா, கண்கொள்ளா காட்சியா இருக்கே ! தொட்டுப் பார்க்க ஆசை ஆசையா இருக்கு.

    நீங்க ஒன்னும் கஷ்டப்பட வேணாம் ப்ரியசகி. ஸ்னோவை அள்ளுவதற்கு என்னைக் கூப்பிடுங்க. வந்துவிடுகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க சித்ரா. நிறைய மலைபோல் குவித்து வைத்திருக்கு. ஸ்னோவை. இன்னும் கொட்டிட்டிருக்கு. வந்து ஆசைதீர தொட்டுப்பாருங்க.
      ஸ்னோ அள்ள வாரீயளா!!! ஆவ்வ். வாங்க, வாங்க கெதியில் அடுத்த ப்ளைட் பிடிச்சு!!!.தாராளமா நிறைய இருக்கு!.ஸ்னோதான்.
      ரெம்ப நன்றி சித்ரா.-

      Delete
  8. Replies
    1. பார்க்கும்போதே குளிருதா!!! அண்ணா.
      -நன்றி-

      Delete
  9. ரொம்பவும் அழகாயிருக்கு பிரியசகி! ஆனாலும் இந்தக்குளிரிலும் பனியிலும் தினசரி வாழ்க்கை கொஞ்சம் கஷ்டமாகவே இருக்கும் இல்லையா? அந்தக் க‌ஷ்டமும் பழகிப்போயிருக்கும் உங்களுக்கு!

    ReplyDelete
    Replies
    1. பழகிவிட்டதுதான்.ஆனாலும் ஒவ்வொரு முறை வரும்போது புதிதாக பழகுவதுபோல் இருக்கும். இதுதான் என ஆகிவிட்டது என்றபடியால் சமாளிக்கின்றோம் அக்கா.
      ரெம்ப நன்றி மனோக்கா.

      Delete
  10. அழகோ அழகு
    ஆனாலும் இச்சூழலில் வாழ்வது கடினம்தானே

    ReplyDelete
    Replies
    1. பழகிவிட்டது. அதனால் சமாளித்துக்கொண்டு இத்தனை வருடங்களாக இருக்கின்றோம். இருக்கத்தான் வேணும்.
      ரெம்ப நன்றிகள் வருகைக்கும்,கருத்துக்கும்.

      Delete
  11. பார்க்க அழகாத்தான் இருக்கு. ஆனால் இந்த உறைபனி குளிரில் நானெல்லாம் ஒருநாள் தாங்கினாலே கஷ்டம். வீட்டில் ஃப்ரிட்ஜைத் திறந்தாலே நூறு தும்மல் போடும் ஆள் நான். :) இந்த மாதிரி சூழலில் இயல்பு வாழ்க்கை எவ்வளவு கடினம். கவனமாயிருங்கப்பா.

    ReplyDelete
    Replies
    1. ஓ..அந்த கஷ்டம் இருக்கா கீதா. பழகிக்கொண்டாச்சு ரெம்ப நன்றி கீதா உங்க அன்புக்கும்,அக்கறைக்கும்.
      -நன்றி-

      Delete
  12. சகோ எனது பழமொழிகள் படிக்க 2014 டிசம்பர் மாத பதிவு ''ஊர்க்கதை ''படிக்கவும் நன்றி

    ReplyDelete
    Replies
    1. படிக்கிறேன் சகோ நன்றி.

      Delete
  13. Beautiful snow ammulu..looks very nice and Christmassy!! :)
    So you grow the plants only in the pots? Where do you keep them in winter??

    ReplyDelete
    Replies
    1. Thanks mahi. yes,unfourtunately keep some of plants inside.

      Delete
  14. இன்று தங்களை வலைச்சரத்தில் அறுமுகம் செய்து இருக்கிறேன் காணவாருங்கள்.
    http://blogintamil.blogspot.com/2015/02/1.html

    ReplyDelete
    Replies
    1. மிகவும் சந்தோஷம் உமையாள்.ரெம்ப நன்றி.

      Delete
  15. படங்கள் அருமையா இருக்கு ப்ரியா.

    //வீட்டுக்கு (தபாற்காரர், பேப்பர் கொண்டு) வருபவர் வழுக்கி விழுந்துவிட்டால் நாம்தான் அவர்களுக்கான பணம் (மருத்துவச்செலவுக்கான)கட்டவேணும்.// இது வேறையா. நல்ல ஊர் தான்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க சிவா!! நீண்டநாட்களுக்கு பின். வருகைக்கு மகிழ்ச்சி. ஆமாம் எங்க ஊர் நல்ல ஊர்தானே. சந்தேகமேயில்லை. நன்றி சிவா வருகைக்கும், கருத்துக்கும்.

      Delete
  16. இன்னுமா அங்கு பனிக்கொட்டுது அட நம்ம ஏரியால வெயில் மண்டைய பொழக்குதே அம்மு ..!

    அழகான காட்சிகளாய் இருக்கு பனி படர்ந்த வீடுகள்
    அருமை

    ReplyDelete
    Replies
    1. தாமதமான நன்றிகள்.

      Delete
  17. அன்பின் அருந்தகையீர்!
    வணக்கம்!

    இன்றைய...
    வலைச் சரத்திற்கு,

    தங்களது
    தகுதி வாய்ந்த பதிவு
    சிறப்பு செய்துள்ளது!

    வருக!
    வலைச்சரத்தில் http://blogintamil.blogspot.fr/
    கருத்தினை தருக!

    நட்புடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
    Replies
    1. என்னை அறிமுகப்படுத்தியமைக்கு தாமதமாக நன்றி சொல்கிறேன்.மன்னிக்க.

      Delete
  18. இன்றைய 21.03.2015 வலைச்சர அறிமுகத்திற்க்கு வாழ்த்துகள் சகோ.

    ReplyDelete
    Replies
    1. தகவல் தந்தமைக்கு மிக்க நன்றிகள். sorry for the late.

      Delete
  19. ஆஹா படங்கள் மிக அருமை. ஆனால் குளிரை நினைத்தால் தான் கொஞ்சம் பயமாக இருக்கு.எனது வலைப்பூவுக்கு வருகை தந்து கருத்து சொன்னதற்கு மிக்க நன்றி. தொடர்ந்து வருகை தாருங்கள்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிகள் வருகை தந்து கருத்தும் பகிர்ந்தமைக்கு.
      குளிர் பழகிவிட்டது எங்களுக்கு.
      நிச்சயம் வருகிறேன். நன்றிகள்.

      Delete
  20. aaha nala iruku. vaalthukal alaga pugaipadam edhu irukega.

    ReplyDelete

 
Copyright பிரியசகி