RSS

02/08/2013

நடுவுல கொஞ்சம் பதிவைக் காணோம்.

 உங்க பக்கத்தில புதுப்பதிவைக்காணேலை, நேரமில்லையோ??
தோட்டத்தில புதுசா பயிர் நடவில்லையோ? ஏன் இன்னும் தூசு தட்டேலை , வெள்ளை அடிக்கேலை, கெதியா அடியுங்கோ!!? என்று 
இப்படி கேட்டவர்களுக்கும், ஊக்குவித்த(கர்)வர்களுக்கும் நன்றி,நன்றி . 
  ***************************** 
26.7.13  அன்று என் வலைப்பக்கம் மீண்டும் வலைச்சரத்தில் 
அறிமுகப்படுத்தப்பட்டது. அறிமுகப்படுத்திய பதிவர் அம்பாள்அடியாள்.  அவருக்கு என் மனமார்ந்த நன்றியினை இத்தருணத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்.
                                              
நான் தமிழெழுத்தில் செய்து பார்க்கவேண்டுமென்ற ஆர்வத்தில்  ரோஜா பூ  ,இலை 
உட்பட செய்த கார்ட். எடுத்துக்கொண்ட  நேரம்! 30 நிமிடம்.இப்படி செய்தது 
முதல்முறை. இன்னும் டெகரேட் செய்திருக்கவேணும். பதிவில் போடுவதற்காக,
உடனேயே  படம் எடுத்து போட்டுவிட்டேன்.
         ******************************************************************** 
   ஒன்றா.. இரண்டா.. பிரச்சனை எல்லாம் சொல்லவே
   (முடியுமா) ஓர் பதிவு போதுமா ?
 எல்லோருக்கும் வரும் பிரச்சனைகள்தான்  எனக்கும். ஆனால் நீண்ட நாட்களாகிவிட்டது. இதிலிருந்து நான் கற்றபாடம் எங்களுக்கு என்று  ஒரு ப்ளாக்  ஆரம்பித்தால் அதில தீயா வேலை செய்யனும்.....?  
சரி ஒரு பதிவு  நேரம் ஒதுக்கி எழுதுவோம் என நினைத்தால்...... 
நினைத்ததெல்லாம் நடக்குதா . இல்லையே. அதே தான் எனக்கும். 
                     <><><><><><><><><><>
 மிக முக்கியமான நபருக்கு வைரஸ் காய்ச்சல். எல்லா கடவுளிடமும் நேர்த்திதான். உசிரு இருக்க வேணுமே என்று. பின்பு  எல்லா உறுப்புகளும் இயங்கவும் வேண்டும் . ஆளைப்  பார்த்து ,செக் செய்து , ஆன்டிபயோடிக் மருந்து கொடுத்து, ஆளை உருப்படியா எடுக்க, என் வீட்டுல இருக்கிற டாக்டருக்கு (அய்யய்யோ அவரு அந்த நபருக்கு மாத்திரம்தான் டாக்டர் ) நேரமில்லை.  அந்த விஐபி  வேறு யாருமில்லை என் லப்டொப்தான். 
                                                                
                                               pic: gg

இது இல்லாட்டில் கையும் ஆடாது, காலும் ஓடாது  என்று  நல்லாவே என் நண்பிக்கு தெரியும். அவர்  தான் தன்னுடைய  லேப்டாப் ஐ  தந்திருந்தா. இந்த இடத்தில அவருக்கு நன்றி சொல்லவேணும். இன்னொருவருக்கும் கூட நன்றி. அது வேறு யாருமில்லை. என்னவர் தான்.  செய்த உதவியை மறக்க கூடாது "என்று அதிராட அம்மம்மா சொன்னவாவாம்,:)  அதிராவுக்கு. அதை அதிரா தனது ப்ளாக்கில் எழுதியிருக்கிறா.  இதை போல தனபாலன் சாரும் அவரோட பக்கத்தில வள்ளுவர் தாத்தா சொன்னதை எழுதியிருக்கிறார். தாத்தா, அம்மம்மா சொல்லை நானும் கேட்கிறன்.) 
என் மகனைப்பற்றி இதில் சொல்லவேண்டும்.(இங்கு வீட்டில்) அவருக்கு  நான் என்ன கொடுத்தாலும், (உணவு உட்பட) எது செய்தாலும் சிறுவயதிலிருந்தே உடனே  நன்றி சொல்லி விடுவார். நானோ ,கணவரோ சொல்ல மறந்தாலும் நினைவு படுத்துவார். சொல்லுமட்டும் விடமாட்டார். சொல்லவில்லையென அழுதும் இருக்கிறார். எங்களுக்குள் சொல்லத் தேவை யில்லை என்றால் விடமாட்டார். நன்றி சொல்வது நல்ல பழக்கம் தானே என்பார் . அவர்  மட்டுமில்லை. கணவரோ, நானோ ஒருவருக்கு ஒருவர் சொல்லிக்கொள்ள வேண்டும். நல்ல பழக்கவழக்கங்களை குழந்தைகளிடமிருந்தும் கற்றுக்கொள்ளலாம்  .
    பின்பு  வீட்டில் சில திருத்தங்கள், மாற்றங்கள் செய்தோம். இன்னும் செய்ய வேண்டியிருக்கு சில வேலைகள். மகனின் அறையில் வால்பேப்பர்(wallpaper) ஓட்டுவது முதற்கொண்டு , mobil changes என இன்னும் வேலைகள் இருக்கு. அவரின் அறையில் இன்னமும் மாற்றங்கள் செய்ய வில்லை.  பழையன கழித்தலும், புதியன புகுதலும். இதுவும் கடந்து போகும்.
இப்படி சிலபல காரணங்கள்.  நடுவுல கொஞ்சம் பதிவைக் காணோம் . இப்ப லப்டொப்பையும் ஏதோ  தில்லுமுல்லு செய்து, திருத்தி தந்திருக்கிறார் . இனியும் எழுதாமல் இருக்கவேண்டாமே என்று 
இப்படியாக??? ஒரு கோலத்தை  போட்டு விட்டிருக்கிறேன். 
            (அதுக்காக கோலத்தைக் காணேல்லை எனச் சொல்லக்கூடாது 
இது ஆசியா என்னை வலைச்சரத்தில்  அறிமுகப்படுத்தியபோது வேறு வடிவில் 
எழுதிய பதிவு. சில தடைகளால் பதிவிடமுடியவில்லை. ஆனாலும் பதியாமல் 
விட்டு விட மனமில்லை.அதனால் ஒரு சில திருத்தங்களுடன்.   
                          =^=^=^=^=^=^=^=^=^=^=^=^=
பதிவை வாசித்த பொறுமையின் சிகரங்களுக்கு (நன்றி)                 
                     ன் வீட்டு தோட்டத்து ரோஜாக்கள்  
 
                                             டாலியா
 பூக்கள் பூத்துமுடிந்து,இப்ப திரும்ப பூக்கத்தொடங்கியிருக்கு. 
 இங்கு (ஜேர்மனி )ஒருமாதமாக (இடையிடையே மழையுடன்) கடும் வெயில் 
 சுட்டெரிக்கிறது. பாடசாலை விடுமுறை விட்டாசு .இனி செப்டெம்பரில்தான் 
 புதிய வகுப்புகள் ஆரம்பம்.
                         ********************************************** 

எனக்குப் பிடித்த பாடல்:_    
      இப்பாடல் இடம்பெற்ற  திரைப்படம்  தில்லுமுல்லு  இப்படத்தை மீண்டும் 
     எடுத்திருக்கிறார்கள். ரீமேக் செய்த படத்தில் இப்பாடலைப் பாடியிருப்பவர் 
     பாடகர் கார்த்திக் .
                                   என்ன இருந்தாலும் ஓல்ட் ஈஸ்ட் கோல்ட்
     ஆனாலும் இப்ப இருக்கும் பாடகர்களில் கார்த்திக் பாடிய பாடல்கள் எல்லாம் 
     எனக்கு பிடிக்கும் . அந்த வகையில் இதுவும் பிடித்திருக்கிறது.
     காட்சியும், கானமும் அன்று பெஸ்ட் . இன்று கானம் மட்டுமே பெஸ்ட். 
       (இது என் கருத்து )
                                 அன்று

                                   இன்று
                          <><><><><><><><><><>
   
 
                                
   
                              



 
 




                            




26 comments:

  1. ஹைய்ய்ய்ய் நான் தான் இங்கே முதல் ஆள்!
    இருங்க படிச்சிட்டு வாரேன்!

    வந்துட்டீங்க... வாழ்த்துக்கள் அம்மு!

    ReplyDelete
    Replies
    1. முதலில் நன்றி கூறும் க்விலிங். சிம்பிள் & சூப்பர்!
      அழகாக தமிழ் எழுத்து கைகளில் தவழ்ந்திருக்கு. அழகு!

      ஓ.. கணினிக்கு வைரஸ் அட்டாக்கோ.. பாவம்.. அதுதான் நடுவில கொஞ்சம் பக்கத்தைக் காணமா?...

      சரி இப்போ எல்லாம் சரியாயிடுத்து.. இனி தொடர் பதிவுகள்தான் உங்களிடமிருந்து...

      ம். ஆரம்பமாகட்டும்... தொடரட்டும்!

      Delete
    2. வாவ்... கொள்ளை அழகு ரோஜாப்பூக்கள்!
      நல்ல ஏர்டெல் ரோஸ் இனங்களென நினைக்கிறேன். பெரிசு பெரிசா பூத்திருக்கு. கலர்களும் சூப்பர்!
      எனக்கதில் ஒரு பூ வேணும் அம்மு!..:)

      பாடல் தெரிவு நல்ல இருக்கு. பழைய பாடல்தான் நான் கேட்டிருக்கின்றேன்.

      புதிது எனக்குப் புதிது. அதுவும் கார்த்திக் குரலில் நன்றாகவே இருக்கின்றது.

      நல்ல கதம்ப மணம் வீசும் பதிவு! அனைத்தும் அருமை!

      வாழ்த்துக்கள் அம்மு!

      Delete
    3. வாங்க இளமதி.முதல் வருகைக்கு பூக்கள் எடுக்கவும்.
      //ஓ.. கணினிக்கு வைரஸ் அட்டாக்கோ.. பாவம்.. அதுதான் நடுவில கொஞ்சம் பக்கத்தைக் காணமா?// பதிவு போட்டபின்பும் ஏதோ நடந்துவிட்டது. கொம‌ன்ட் பொக்ஸ் நீண்ட இடைவெளி.
      //சரி இப்போ எல்லாம் சரியாயிடுத்து.. இனி தொடர் பதிவுகள்தான் உங்களிடமிருந்து.//இன்னும் சரியில்லை போலும்.உங்களுக்கு உடன் போட்ட என் பதில் வரவில்லை.ஏதோ திரும்பவும் சரியில்லை.எழுத்துக்கள் தாவிப்போகின்றன.
      பூக்கள் இருகாலத்திற்கும் ஏற்றவை. பெரிய பூக்கள்தான். தாராளமாக எடுங்கோ.
      பாட்டு உங்களுக்கும் பிடித்திருப்பது மகிழ்ச்சி.உங்க முதல் வருகை,வாழ்த்துக் களுக்கு நன்றிகள் இளமதி.

      Delete
  2. நல்ல பழக்கவழக்கங்களை குழந்தைகளிடமிருந்தும் கற்றுக்கொள்ளலாம் .

    நல்ல நல்ல குழந்தைக்கு வாழ்த்துகள்..

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும்,வாழ்த்துக்கும் ரெம்ப நன்றி.

      Delete
  3. மலர்ந்து மணம் பரப்பும் ரோஜா மலர்கள் அழகு...

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு ரெம்ப நன்றி.

      Delete
  4. ரோஜா மலர்கள் + பாடல் அருமை...

    தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. வந்து வாழ்த்தியமைக்கு நன்றிகள் சார்.

      Delete
  5. வாழ்த்துக்கள் தோழி .இனித் தொடர்ந்தும் கலக்குங்க :)

    ReplyDelete
    Replies
    1. வந்து வாழ்த்தியமைக்கு நன்றிகள் தோழி

      Delete
  6. முப்பது நிமிடங்கள் உழைத்து அழகான "நன்றி"க்கு பாராட்டுக்கள்... ரோஜாப்பூக்கள் கொள்ளை அழகு...

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருக்கைக்கும்,வாழ்த்துக்களுக்கும் நன்றிகள்.

      Delete
  7. அழகான பதிவு அம்முலு! தமிழ் எழுத்துக்களில் வளைவுகள் அதிகமிருப்பதால் க்வில்லிங் செய்வது கடினம் என நினைக்கிறேன். இருப்பினும் முப்பதே நிமிடங்களில் செய்த நன்றி அழகாய் இருக்கு. :)

    மண்ணில் வளர்வதால் ரோஜாக்கள் செழிப்பாய் இருக்கின்றன, ரோஸ் கார்டன் நினைவு வருகிறது! கடைசி படம் டேலியா-வா?

    உங்கள் மகனின் நன்றி-நல்ல பழக்கம். ப்ராக்டீஸ் வாட் யு ப்ரீச்- என்பதை கடைபிடிக்கிறார், பாராட்டுக்கள்!

    கணிணி உடல்நலம் தேறி வந்தது மகிழ்ச்சி. :) இனி அடிக்கடி பதிவுகள் எதிர்பார்க்கிறோம்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க மகி. வருகைகண்டு மகிழ்ச்சி. உண்மையில் கஷ்டம்தான். ஆனால் இது
      பார்சலில் வைத்து அனுப்பும் பேப்பரைத்தான் வெட்டிவைத்திருந்தேன். அது கொஞ்சம் வலையக்கூடியது.அதனால் ஒரு பேப்பரிலேயேதான் ஒவ்வொரு எழுத்தும் செய்தேன்.ரோஜா முதல் செய்துவிட்டு இதை முயற்சி செய்தேன்.இம்முறை டைம் பார்த்துதான் எல்லாம் செய்தேன்.

      Delete
    2. யா..அது டேலியாதான்.உங்க ஞாபகம் வரும்.புதினாவும் படம் போட்டேன்.ப்ளொக்கர் குழப்படி செய்ய ஆரம்பித்ததனால் விட்டுவிட்டேன்.ரோஜா இம்முறை எல்லாம் புதிதாக வாங்கியது.வீட்டில் கொம்போஸ் தயாரித்துப் போடுவதால் வருகிறது

      Delete
    3. அவரை அவரின் ப்ரெண்ட்ஸ் வீட்டில் எல்லாருக்கும் பிடிக்கும்.அம்மாக்கள் சொல்வார்கள்.அவ்ர்கள் வீட்டில் போய்விளையாடிவிட்டு, பொருட்களை எல்லாம்
      எடுத்துவைத்துவிட்டுத்தான் வருவார்.ஸ்கூலில் ஹாபிட் எப்போது ஏ ஸ்டார்தான்.
      உங்க வாழ்த்துக்களுக்கும்,பாராட்டுக்கும் ரெம்பநன்றி மகி.

      Delete
  8. அம்முலூஊஊஊ, ஹைய்ய்ய்ய்யா .....

    நியாயமாப் பார்த்தா நான் தான் இங்கே முதல் ஆளா வந்திருக்கணும். ஏதோ என் போதாத காலம் இப்படி 5-6 பேர்களுக்குப்பிறகு தான் வரணும் என்று தலைவிதீயாப்போச்சு. ;(

    போனாப்போகுதுன்னு விட்டுக்கொடுத்து போய்க் கொண்டிருக்கிறேன்னு அந்த முதல் ஆளிடம் சொல்லி விடுங்கோ. அம்முலு.;)))))

    வர வர ரொம்பத்தான் அலட்டிக்கிறாங்கோ. ;(((((

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. எல்லாமே நல்லா இருக்கு அம்முலு.

      42 நாட்களுக்குப்பிறகு இந்தப்பதிவைப்பார்த்ததில் எனக்கு மகிழ்ச்சியோ மகிழ்ச்சி.

      தாங்கள் விளைவித்துள்ள ரோஜாக்கள் எல்லாமே அழகோ அழகு.

      மனமார்ந்த பாராட்டுக்கள். அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

      அன்புடன் கோபு

      Delete
    2. வாங்க அண்ணா. தவறு நடந்துவிட்டது. மன்னிக்க. உங்க வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றிகள்.

      Delete
  9. Roja thottam Arumai... Quilling art azhagaa irukku...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் ரெம்ப நன்றி ப்ரியா.

      Delete
  10. பதிவு நல்ல கலகலப்பாவும், சுவாசரசியமாவும் இருக்கு! நாலைஞ்சு சினிமா பட தலைப்பெல்லாம் வந்து போச்சுது.. :) சரி உங்கள் வி ஐ பி யை இனி நோய்வராமல் பார்த்துக்கொள்ளுங்கள்!

    நன்றி சொல்வது கண்டிப்பாக நல்ல பழக்கம்! உங்கள் மகனுக்கு ஹாட்ஸ் ஆஃப்! ராகங்கள் 16 சூப்பர்!

    மொத்தத்தில் பதிவும் சூப்பர் :))

    ReplyDelete
  11. வாங்க பிரபல எழுத்தாளர் மணிமணி அவர்களே.//பதிவு நல்ல கலகலப்பாவும், சுவாசரசியமாவும் இருக்கு// உங்களை போல இல்லாவிட்டாலும்,ஏதோ கொஞ்சமாவது எழுதவேணுமெல்லே.
    //உங்கள் வி ஐ பி யை இனி நோய்வராமல் பார்த்துக்கொள்ளுங்கள்// இன்னும் சரியாகலை. சேலைன் ஏற்றிக்கொண்டிருக்கிறன்.
    மிக்க நன்றி மணிமணி வருகைக்கும்,கருத்துக்கும்.

    ReplyDelete

 
Copyright பிரியசகி