RSS

02/08/2012

கதையல்ல நிஜம்...

என் ப்ளாக் ஆரம்பிக்க போடப்பட்ட பிள்ளையார் சுழிதான் கதையல்ல நிஜம்.என்னையும், இளமதியையும் சுற்றி பின்னப்பட்ட வலை(த்தளம்)ப்பின்னல்கள் தாம் இவை.அந்த பின்னல்களைத்தொகுத்திருக்கிறேன். இதற்குள் மாட்டிய மீன் அம்முலுவாகிய நான். மறைந்தது நிலா. ஆனாலும் அந்த நிலா ஒருநாள் வெளிச்சம் காட்டும்.

                       

             "என் பக்கத்தில் வந்த வாழ்க்கையிலே                     

               ஏற்பட்ட தென்றல்கள் தாம் இவை."

 

இமா சொன்னது;_
// வேண்டாம். நல்ல வடிவா இருக்கு இளமதி. எனக்கு பெரிதாக்கிப் பார்க்க   ஆசையாக இருந்துது, முடியேல்ல. நீங்கள் ஏன் ஒரு வலைப்பூ தொடங்கக் கூடாது! உங்கட வேலைகளைப் பகிர்ந்து கொள்ளுங்கோ. கனக்க எழுத வேணும் என்று இல்ல. சின்னதாக நான்கு வரி கூடப் போதும். எங்கட பக்கம் எல்லாம் வரவேண்டும் என்று கட்டாயம் எதுவும் இல்லை. நாங்கள் பிழையாக எடுக்க மாட்டோம். ஆனால்... இவ்வளவு வடிவாச் செய்துபோட்டு ஒருவருக்கும் காட்டாமல் இருக்கப்படாது. :) நாலு பேர் பார்த்து நல்லா இருக்கு என்று சொன்னால் இன்னும் உற்சாகம் வரும். விரைவில் எதிர்பார்க்கிறேன்.




இளமதி கூறியது;_
 ஏன் இப்பிடி செஞ்சா என்ன? நல்ல ஒரு யோசனை.
சொன்னா என்னை யாரும் அடிக்கப்பிடாது.
அது என்னெண்டால்......உங்கள் யாருடைய புளொக்கிலாவதுஉஉஉ எனக்கும் ஓரமாஆஆஆ ஒரு இட.....ம்ம்ம்ம்ம்ம் தாங்..................


 இமாவின் பதில்;_
ஆனால்... எனக்கு ஒரு சின்னக் கருத்து இருக்கு இதுபற்றி, நீங்கள் தனிய ஆரம்பிக்கிறதுதான் உங்களுக்கு நல்லது. அஞ்சுவோ நானோ எங்கட வலைப்பூவில ஓரமாப் போட... வாற ஆட்கள் அவசரத்தில, ஒழுங்காக வாசிக்காமல், கண் படம் பார்க்க மனம் கதை சொல்ல, எங்கட வேலை என்று நினைச்சுக் கருத்துச் சொல்லிப்போட்டுப் போறது நிச்சயம் நடக்கும். 'இது நான் செய்ய இல்லை,' என்று குறிப்புப் போட்டு இருந்தும் கூட பல முறை இப்பிடிப் பதில் வந்து இருக்கு எனக்கு. ;)
உங்கட ஆக்கங்களுக்கு 100% உங்களுக்கு மட்டும் பாராட்டுக் கிடைக்க வேண்டும் என்கிறது என் எண்ணம்.

angelin said...
 இளமதி :)) புரிகிறது .நான் தரேன்.


இமா said...
மூன்று பேர்ல யாரைத் தெரிஞ்சாலும் எங்கட சப்போட் உங்களுக்கு இருக்கும். நம்பி எலெக்க்ஷன்ல நிற்கலாம். ;))

athira said...
    நோஒ.. நோஒ..நோஒ.. நான் தான் தருவேன்ன்ன்.. யங்மூன்... உங்களுக்கு நான் முருங்கைக்கொப்பில் இடம் தருவேன்ன்... என்னிடம் வாங்கோ.




athira said..
உங்களையும் அம்முலுவையும் புளொக் திறக்க வைக்க வேண்டுமென எனக்கு நீண்ட நாள் ஆஆஆஆஆசை.... ஒருவரும் வந்து பின்னூட்டம் போடாவிட்டாலும் பறவாயில்லை, அது உங்கள் பொக்கிஷமாக, ஒரு சேமிப்பாக இருக்கட்டுமே.. நான்கூட அப்படி நினைத்துத்தான் இதை ஆரம்பித்தேன்ன்ன்.. இப்பூடி ஆச்சு:))

இமா said... 
ம்... அதீஸ்... அம்முலுவைக் கேட்டுக் கேட்டுக் களைச்சுப் போனன் நான். ;) 
 ammulu said..
    அதிரா ரெம்ப நன்றீஈஈஈ.
    இமா உங்களுக்கும் நன்றி.(ப்ளேன் ரீ குடியுங்கோ இமா.)
    அஞ்சுவுக்கும் ரெம்ப நன்றி.
    (அதிரா அஞ்சு(இ)மா)
    உங்க ஆசை நிறைவேற இறைவனைப்பிரார்த்திக்கின்றேன்.
    அதிரா கூப்பிடும் திருச்செந்தூர்முருகா என்னையும் காப்பாத்துங்கோஓஓஓ



இளமதி said..
அம்முலு அதிரா இமா அஞ்சு யோசனைப்படி ஒரு ப்ளொக் ஆரம்பியுங்களேன். எனக்குத்தான் முடியலை. நீங்களாவது அவர்களின் ஆசையை நிறைவேற்றுங்களேன்.//நிறைவேற்றியாச்சே

 athira said..
யங்மூன்”இளையநிலா” என ஒரு புளொக் ஓபின் பண்ணித் தரப்போறேன் okay தானே?:)) 


athira said..
அம்முலு நீங்க ரெடிதானே? புளொக் ஆரம்பிப்போமா?




இமா said..
/”இளையநிலா”// m... நல்ல அலைவரிசை... ;))
அடுத்த ஆளுக்கு!!! வேணாம், நான் எதையாவது சொல்ல, பெரியம்மா மாதிரி இருக்கிற என் இமேஜ் டாமேஜாப் போயிரும். ;)))) 


 angelin said...
அடுத்த ஆளுக்கு!!! //
பிரியங்களுடன் /பிரிய சகி /பிரியமானவளே
ஓகேவா இமா :)))


 இமா said..

    பிரியசகி... இதுதான் முதல் நினைச்சனான். ஆனால், அறுசுவைல அந்தப் பேர்ல எனக்கு ஒரு நல்ல கவிஞரைத் தெரியுமே.

    பிரியமானவளே என்றால்.... நாங்கள் கூப்பிடுற மாதிரி இருக்கு. முதலாவது ஓகே. இன்னும் யோசிச்சுப் பாருங்கோ.

    நான் நினைச்சது.... ;)))) ஒரு படத்திட பேர், த்ரிஷா, ப்ரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா நடிச்ச ஒரு படத்துக்கு தலைப்பாக வரும். ;))))///அபியும் நானும்

    அம்முலு அவங்கட வீட்டில சொன்ன நேரம் கேட்கேல்ல. நாங்கள் திரத்தினால் கொஞ்சம் சரிவருவா.

 இமா said..
//பின்பு விரும்பினால் அவர்கள் பெயரை மாற்றிக்கொள்ளலாம், மெயில் ஐடி, புளொக் ஐடி மட்டும்தானே மாற்ற முடியாது// ஹை!! ம்.. //ரெடி.. ஸ்ரெடி ஸ்ராட்ட்ட்ட் மூசிக்க்க்க்க்க்க்க்// :))))



athira said..
அம்முலுவின் அட்ரஸையே காணேல்லை.
தடவி தடவிச் சொல்லியாச்சு, மிரட்டியும் சொல்லியாச்சு.. இனி இறுதி ஆயுத்தத்தைப் பாவிக்க வேண்டியதுதான்ன்ன்.. பூஸ் ஒன்று புறப்படுதே:))



 இமா said.

ஹையா!!! //கொஞ்சம் தேர் அசைந்திட்டுது.//
//மிச்சத்திற்கு// ஓடி வாங்கோ மக்கள்ஸ்.... ;) இனி எல்லாருமா ஒரு கை இழுத்தால் முழுசா நகர்ந்துரும்


ammulu said...
   அம்முலுவின் அட்ரஸையே காணேல்லை..//இதைத்தான் நான் யோசித்துக்கொண்டிருக்கிறேன்.
  
ammulu said...
    ஐயோ இமா நித்திரைக்கு போகாமலென்ன இது.ம்ம்ம் ஒரு வழி காணாமல்விடமாட்டாங்க போல.
 athira said... 
   இமா said...
    ஹா! ஹா! ;)
    ஹையா!!! //கொஞ்சம் தேர் அசைந்திட்டுது.//
    //மிச்சத்திற்கு// ஓடி வாங்கோ மக்கள்ஸ்.... ;) இனி எல்லாருமா ஒரு கை இழுத்தால் முழுசா நகர்ந்துரும்///

    அவ்வ்வ்வ்வ் அம்மன் கோயில் தேரோ?:)) ஹா..ஹா..ஹா... அது காத்தில ஆடிட்டே இருக்குது இப்போ கொஞ்சக்காலமா... கிட்டத்தட்ட டிஷம்பரில் இருந்து,:)) எல்லோருமாச் சேர்ந்து இழுத்து எங்காவது ஈபிள் டவர் தூணில கட்டினால்ல்ல்.. பின்பு ஒழுங்கா ஓடும்.... ரெடீஈஈஈ ஸ்ராட் மூசிக்க்க்க்க்.. சிங்குசா.. சிங்குசா... இளையநிலா சிங்குசா.... பிரியசகி சிங்குசா.. சிங்குசா சிங்குசா:)))))...
 (நன்றி கூகுள்)
*************************************************
 இன்னும் என்னென்ன எங்கெல்லாம் பேசியிருந்தார்களோ தெரியாது.இந்தப்பேச்சால் ஆரம்பித்ததுதான்.அதிலும் இன்டசிட்டி ரெயினை விட(ப்ளேனைப்பற்றி நான் சொல்லேல்ல.பீலிங்ஸ் ஆகிவிடுவார் பூஸார்) வேகமாக பூஸார் போயிட்டார்.அதனால தான் எப்படி(யோ) இருந்த நான் இப்படி (ப்ளாக்)ஆ(ரம்பித்து)கிவிட்டேன்.  சரி வாசித்து களைத்திருப்பீங்க.
வெயிலுக்கு  இதமா பலூடா குடியுங்க. என் சொந்த  தயாரிப்பு.

 
இப்படி ஆரம்பித்துதான் (ப்ளாக்) கதையல்ல நிஜம். 

      "" நீங்கள் நேற்று செய்ததை இன்று  யோசித்துக்கொண்டிருந்தால்,
       இன்று  ஒன்றும் செய்யவில்லை என்று புரிந்து கொள்ளுங்கள்"".


22 comments:

  1. எனக்கு தான் முதல் ஃபலூடா :))

    அட்டகாசம் அம்முலு ..மிக மிக அருமை

    ReplyDelete
    Replies
    1. எடுத்துக்குங்க உங்களுக்குத்தான் பலூடா.ரெம்ப நன்றி அஞ்சலின்.

      Delete
  2. நீங்கள் நேற்று செய்ததை இன்று யோசித்துக்கொண்டிருந்தால்,
    இன்று ஒன்றும் செய்யவில்லை என்று புரிந்து கொள்ளுங்கள்"".//

    அருமையான அழகான தத்துவம் ..வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி அஞ்சலின்.இப்படி இன்னமும் இருக்கு.

      Delete
  3. ஓ ப்ரியா!
    என்னதிது கதையல்ல நிஜம் என்றிட்டு கதைகதையா அளந்துவிட்டிருக்கிறியள். நடக்கிறதை பார்த்தா எங்கினையும் வந்து ஏதாலும் சொல்லவே பயமாக்கிடக்கு.
    கடவுளே என்னைக் காப்பாத்து...........
    யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம்
    அம்மம்மா பூமியிலே (அதுக்குமேல தெரியாதூஊஊ)

    ப்ரியா! நீங்க இறங்கீட்டிங்க. தொடருங்கோ! வெல்லுங்கோ!!!!!!
    ஆனால்ல்ல்.... உந்த விளையாட்டுக்கு நான் வரேல்லையடா சாமி!!!!!!!

    நல்ல நல்ல படங்களெல்லாம் போட்டு கலக்கீட்டியள். எனக்கு அந்த கடக்கரையில நிலவு படம் வேணும் தாறீங்களே;)

    ச்சா! கடைசியில இருக்கிற 2ம், கண்ணுக்கு பலூடா,
    கருத்துக்கு பிரியாமொழி;)) நல்லா இருக்கு:)))
    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. ஆ..மதி இளமதி வாங்கோ.உங்களைத்தான் தேடினனான். ம்ம் நீங்க எஸ்கேப்பாயிட்டீங்க. நான்...சரி பரவாயில்லை.எவ்வளவோ பார்த்திட்டம். இதையும் பார்ப்போம்.முன்வைத்த காலை பின் வைக்ககூடாது என்று பூஸ் சொல்லியிருக்கிறா.

      உதுதான் சொல்லுறது அக்கம்பக்கம் பார்த்து எழுதோனும்.ஒரு பழமொழி இருக்கெல்லோ.அதுதான் அளந்துபோட்டிருக்கேன்,
      எதுவேணுமோ எடுங்கோ.நான் படத்தைச்சொன்னேன்.
      ரெம்ப‌ நன்றி இளமதி.

      Delete
    2. ”இளையநிலா” உரிமையாளரும் இங்கினதான் இருக்கிறாவோ?... அவ எப்பவாம் திறப்புப் போடப்போறா? ஐ மீன் திறப்புவிழா வைக்கப்போறா?:).

      Delete
  4. அவ்வ்வ்வ்வ்வ் அமுலுவா இது?
    கலக்கிட்டேள் போங்கோ... ஆயிரம் பொய் சொல்லியாவது ஒரு கலியாணத்தை முடிச்சு வைக்கோணும் எனச் சொல்லுவினம், நாங்க ஆயிரம் இல்லை, ஒரு 50, 60 வெருட்ட்டு வெருட்டி, ஒரு புளொக்கை ஓபின் பண்ண வச்சிருக்கிறம், வாழ்த்துக்கள்.

    தொடர்ந்து கலக்குங்கோ.

    ReplyDelete
  5. ஆ..... அதிரா. நலமாயிருக்கிறியளோ?.வாங்கோ எல்லாமே நீங்க அனுப்பின மெடிசினாலதான்.மிக்க நன்றி.

    ReplyDelete
  6. அப்பாடா உங்க கதைய படிச்சு முடிச்சாச்சு
    ம் இவ்ளோ சோகம் இருக்கா :)
    ரெம்ப களைச்சு போய்ட்டேன்..

    MIXER JUICE PLEASE...

    " நீங்கள் நேற்று செய்ததை இன்று யோசித்துக்கொண்டிருந்தால்,
    இன்று ஒன்றும் செய்யவில்லை என்று புரிந்து கொள்ளுங்கள்"".//
    சூப்பர்

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ குட்டி சி(வா)ங்கம்.உங்களுக்காவது புரிந்துதே.கஷ்டம் வேண்டாம் என்று நிலா மறைந்திட்டுது.
      ஓ.கே ஜூஸ் குடிங்க.

      Delete
  7. நீங்களும் பிரபல தத்துவ ஞானி பேபி அதிர போல ஆகிட்டீங்களே ....

    கதை சொன்னவிதம்
    படம் எல்லாமே நல்லா இருக்கு அக்கா
    கலக்குங்க
    அப்படியே உங்கள் கவிதை எல்லாம் எடுத்து விடுங்க படிக்க நாங்கள் ரெடி.

    பின்னாளில் நீங்கள் செய்த குறும்புகள்
    எல்லாம் தொடருங்கள்...

    ReplyDelete
    Replies
    1. அந்த வழிகாட்டல்தானே.அதில் கொஞ்சம் தொற்றிவிட்டது.
      நான் பார்த்த,ரசித்த,ருசித்தவைகள் எழுத இருக்கிறேன்.மிக்க நன்றி சிவா.

      Delete
  8. கதையல்ல நிஜம் என்று சொல்லி, பதிவுலகில் அடியெடுத்து வைச்சுட்டீங்க, வாழ்த்துக்கள்! :)

    இந்தப் பின்னூட்டங்கள் எல்லாம் எங்கெங்கே வந்தது என்று எனக்குத் தெரியலை, ஆனால் தொகுப்பா படிக்க கதை மாதிரியே இருக்கிறது. கூடவே அழகழகான படங்களும் பொருத்தமாக இருக்கின்றன.

    ஃபலூடா நான் இதுவரை ருசித்ததில்லை, நம்பி குடிக்கலாமா? ;)

    ஹேப்பி ப்ளாகிங்! :))))

    ReplyDelete
    Replies
    1. மகி ரெம்ப நன்றி என் ப்ளாக் வந்ததற்கும்,பாலோவாரானதற்கும்.

      அதுதான் கவிதை மாஆஆதிரி முதல் எழுதியிருக்கே அதை வாசித்தால் புரியும்.
      அங்கேதான் நடந்தது இவ்வளவும்.

      நல்ல டேஸ்ட். நம்பிகுடிக்கலாம்.ஆனால் லேட் நீங்க.அஞ்சு எடுத்திட்டாங்க.

      Delete
  9. //வெயிலுக்கு இதமா பலூடா குடியுங்க. என் சொந்த தயாரிப்பு.//

    எதுக்கும் இன்ஸுரன்ஸ் கம்பெனிக்கு முன்னெச்சரிக்கையா போன் போட்டு வைக்கனும் :-))).

    முதல்ல டேஸ்ட் பார்த்த கோல்ட் ஃபிஷை வேற கானோம் ஹா..ஹா.. :-))

    ReplyDelete
    Replies
    1. மன்னிக்க ஜெய்.நான் உங்க கருத்தைக்காண‌வில்லை.

      வந்ததும் வராததுமா உங்க வேலையை ஆரம்பிச்சாச்சா.
      வருகைக்கு ரெம்ப நன்றி ஜெய்லானி.

      Delete
  10. இந்தப் பதிவு புதுமையாக அழகாக உள்ளது.
    பாராட்டுக்கள்.
    வாழ்த்துகள்.
    அன்புடன்
    கோபு

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்களுக்கும்,பாராட்டுதல்களுக்கும் மிக்க நன்றி அண்ணா.

      Delete
  11. ப்ரியா,

    நீங்க ப்ளாக் ஆரம்பிச்ச கதை இப்போ எனக்கும் தெரிந்துவிட்டது.

    இதுவரை பலூடா சாப்பிட்டதில்லை, ப்ரியாவின் கைவண்ணம் என்பதால் நானும் எடுத்துக்கொள்கிறேன். வாழ்த்துக்கள் !

    ReplyDelete
    Replies
    1. ஆ..வ்வ் சித்ரா. பழசை எல்லாம் இப்ப வாசித்து இருக்கிறியள்.நானே மறந்துவிட்டேன்.உங்களால் திரும்ப வாசித்தேன் ரெம்ப நன்றி சித்ரா.

      Delete

 
Copyright பிரியசகி