RSS

10/07/2012

அடாது மழை பெய்தாலும்....

அடாது மழை பெய்தாலும் விடாது இணையத்திறப்பு..

 வருக வருகவென  இருகரம் கூப்பி வரவேற்கிறேன். 
வருகைதந்திருக்கும்  அனைவரும் முதலில் சுவீட் எடு(ங்கோ) கொண்டாடு.



கோப்பி, டீ குடியுங்கோ.
                                


  பின்னர் கதைக்கலாம்.
(நன்றி:கூ குள் )

23 comments:

  1. ஆஹா அருமை அம்முலு... முதல் பதிவே அழகாக இருக்கு. வாழ்த்துக்கள்.. மேன்மேலும் வளரவும் தொடரவும் என் மனம் கனிந்த வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. உங்க ஊக்கத்துக்கும்,வாழ்த்துக்கும் எல்லாத்துக்குமாக‌ ரெம்ப ரெம்ப ரெம்ப நன்றி அதிரா.

      Delete
    2. ஸ்வீட்டோட , பால் இல்லாத காஃபி , டீ , அப்படியே ஒரு கூல் டிரிங்கையும் வச்சா இன்னும் வசதியா இருந்திருக்குமே ;)

      மீத ஃபஸ்ட் , முழு ஸ்வீட் பாக்கெட்டும் எனக்குதான் ;)

      Delete
    3. கடைசியாக வந்து எல்லாம் எடுத்துங்க.

      Delete
  2. தலைவி சொன்னதையே நானும் அப்படியே வழி மொழிகிறேன்:))))
    வெல்கம் வெல்கம் _()_

    ReplyDelete
    Replies
    1. வாங்க வாங்க. தலைவிக்கு சற்றும் குறைவில்லாதவர்.ரெம்ப நன்றி அஞ்சு.

      Delete
  3. அம்முலு! என் இதயங்கனிந்த இனிய நல்வாழ்த்துக்கள்!
    தொடரட்டும் உங்கள் பணி!!! அனைத்திலும் சிறந்து விளங்கிட மீண்டும் மீண்டும் எம் வாழ்த்துக்கள்!!!
    வாழ்க வளமுடன்!

    ReplyDelete
    Replies
    1. ரெம்ப நன்றி இளமதி. எல்லாரும் வாழ்த்து தெரிவிக்காமல் நிச்சயம் நீங்களும் இதில் பங்குபற்றுங்கள்.

      Delete
    2. ஆ அம்முலு! வந்திட்டீங்களோ? வணக்கம், வந்தனம், நமஸ்தே நமோஸ்கார் _()_
      முதலில் வாழ்த்து தெரிவிக்கிறது பண்பாடெல்லோ:) சொல்லீட்டு மெல்ல உள்ளுக்கை வந்திட்டம். இனி உங்களின்ரை ப்ளொக்கில் பங்குபற்றுறதென்ன ப்ளொக்கை பங்கே போட்டு ஆளுக்கொரு துண்டாய் எடுத்துடுவோம். நீங்க ஒண்ணுக்கும் யோசிக்காதேங்கோ:))))

      Delete
  4. ;) வாழ்த்துக்கள் அம்முலு. நல்வரவு. சந்தோஷம். தொடருங்கோ.

    மூன்றாவதாக ஒருவர் கருத்துப் போட்டிருக்கிறாரே, அவருக்கும் நாங்கள் கருத்துப் போடும் காலம் விரைவில் வரவேண்டும். ;)

    ReplyDelete
    Replies
    1. ஆகா என்னடா டீச்சரைக்காணவில்லையே என நினைத்தேன்.வந்துட்டீங்க.ரெம்ப நன்றி டீச்சர்.கூடிய சீக்கிரம் வருவா.

      Delete
    2. ரீச்சர்......, வந்தமா கேசரியை சாப்பிட்டு கோப்பியைக் குடிச்சமா வாழ்த்தினமா எண்டு இல்லாமல் வாங்கிலை இருக்கிற 3வதுஆள், 4வதுஆள் இப்பிடி ஏதாலும் சொல்லிக்கொண்டே இருக்கிறியள். கர்ர்ர்ர்ர்ர்ர்.

      //அவருக்கும் நாங்கள் கருத்துப் போடும் காலம் விரைவில் வரவேண்டும்//
      ஏன் இப்பவும் உங்களின் ப்ளொக்குகளில் நான் எழுதுறதுக்கு நீங்கள் கருத்துப் போடுறியள்தானே;)))))).
      என்ன அம்முலு சரிதானே..........

      Delete
    3. 'இல்லை, இது வேற' என்று சொல்லாமல் என்ன சிரிப்பு ப்ரியா! ;)
      ம்.. கெதியா போஸ்ட் போடுங்கோ. கோப்பி ஆறிப் போச்சு. ;)

      Delete
  5. அடடா மழைடா
    இனிமே அம்முலு அக்கா ப்ளொக்கில அடை மழைடா....
    வாங்க வாங்க வாங்க
    தங்கள் வரவும் நல் வரவு ஆகட்டும்
    எனக்கு ரெண்டு ஸ்வீட் எடுத்துகிட்டேன்.

    பின்குறிப்பு
    வாழ்த்த வயதில்லை
    அதனால் எங்கள் சங்கம் வணக்கம் தெரிவித்து
    வாழ்த்துகிறது

    ReplyDelete
    Replies
    1. அடடா எங்கட குட்டித்தம்பியும் வந்துட்டார்.நீங்கதான் பர்ஸ்ட்டூ ஸ்வீட் எடுத்தது.ரெம்ப சந்தோஷம்,உங்க வாழ்த்துக்களுக்கு ரெம்ப நன்றி சிவா.

      Delete
  6. துவங்கியுள்ள புதிய தளத்திற்கு என் அன்பான வாழ்த்துகள்.

    ஸ்வீட் இரண்டு மட்டுமே எடுத்துக்கொண்டேன். ஏனென்றால் எனக்கு கொஞ்சம் சுகர் ப்ராப்ளம் உள்லது.

    [சிப்ஸ் போன்ற காரம் ஏதும் வைக்காதது ஓர் சிறிய குறை தான்.]
    காசா பணமா செலவு. அதையும் வைத்திருக்கலாம் தானே! ;)))))

    முதன் முதலாக சந்திப்பதால் இனிப்பு மட்டும் போதும், காரத்தினைக் காட்ட வேண்டாம். காரசாரத்தினை பதிவுகளில் காட்டி ஜமாய்த்திடலாம் என்று இருக்கிறீர்களோ? ;))))) OK OK வாழ்த்துகள்.

    அப்புறம் காஃபி [உங்களின் கோப்பி] 4 கோப்பைகள் எடுத்துக்கொண்டேன்.

    எங்கள் வீட்டில் காஃபியை அடிக்கடி மிகப்பெரிய டவரா டம்ளரில் குடித்துத்தான் எனக்கு வழக்கம்.

    சிறிய கோப்பைகள் எனக்கு சரிப்பட்டு வராது.

    டீ அதிகம் விரும்புவது இல்லை.

    தங்கள் பதிவுகள் சிறக்க என் அன்பான ஆசிகள். வாழ்த்துகள்.

    அன்புடன்,
    கோபு

    ReplyDelete
    Replies
    1. உங்கள் நகைச்சுவையான கருத்துக்களுக்கும்,வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி அண்ணா.

      Delete
  7. பிளாகை விட்டு கா கா போன பிறகு திறந்திருக்கீங்க .இருந்தாலும் என் வாழ்த்துக்கள் நேரம் கிடைக்கும் போது வருகிறேன் ;)

    ReplyDelete
    Replies
    1. இதுக்குத்தான் சொல்றது புளியமரத்துக்கு கீழ் அடிக்கடி போகக்கூடாது என்று.இப்ப மறதியும் வந்துதிட்டுது உங்களைச்சொன்னேன்.
      2 வது பதிவில் கருத்திட்டிருக்கிறீங்க ஜெய். ஆனாலும் நன்றிகள் வருகைக்கு.

      Delete
    2. :-) அது... ஆளுக்கு வயசு போய்ட்டுது ப்ரியா. ;))

      Delete

 
Copyright பிரியசகி